- புத்தகம் பேசுது மாத இதழ்
- அந்த வார்த்தை ……….
- பகடை
- நியூஜெர்ஸி சிறுவ சிறுமியர்களுக்கு சமஸ்கிருத கேம்ப் பாணினி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8
- மழை விரும்பும் மழலை
- விபத்துநேர தீர்மாணங்கள்!
- தாகூர் இலக்கிய விருது பெறும் எஸ் ராமகிருஷ்ணன்
- மகாகவி பாரதி விரும்பிய பாரதம்
- காதல்
- மிருக தேவதை
- விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்
- பாதிக்கப்பட்டவன்!
- மலர்மன்னன் எதிர்வினைக்கு நன்றியுடன்
- ஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -2)
- ‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் ! (கவிதை -32 பாகம் -3)
- போதுமானது
- சூர்ப்பனகை என்றும் தவறானவள் தானா ?
- டைரியின் கடைசிப்பக்கம்
- தமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்
- மதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது
- சுழற்புதிர்
- 4 குறுங்கவிதைகள்..
- விருட்சம்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76
- 57ஆவது சிறப்பு பட்டிமன்றம்
- கதைக்கும் சுவர்ப்பூச்சுகள்
- திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை வேண்டுகோள்
- 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)
சோக்கோ அறக்கட்டளை
மதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா, மாங்குடி
கிராமம், களத்தூர் விலக்கு என்ற இடத்தில் 45 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ள தனது தோட்டத்தில்
தமிழகத்தின் முன்னாள் காவல்துறை தலைமை
இயக்குநரும், சோக்கோ அறக்கட்டளையின்
ஆலோசனைக்குழு தலைவருமான திரு.வி.ஆர்.லட்சுமி
நாராயணன் பெயரில் மூத்த குடிமக்கள் நல்வாழ்வு
மையம் ஒன்றை சோக்கோ அறக்கட்டளை துவங்கி
உள்ளது.
இம்மையம் சிவகங்கை – மானாமதுரை
நெடுஞ்சாலையில் சுந்தர நடப்பு என்ற இடத்திலிருந்து
பெரிய கோட்டை செல்லும் பாதையில் 4வது கிலோ
மீட்டரில் அமைந்துள்ளது. இது அந்நிய நிதியுதவி
எதுவுமின்றி ஈகை குணம் படைத்த பல்வேறு
நண்பர்களின் சிறு சிறு உதவிகளால் இன்று சிறிய
அளவில் பரிணமித்துள்ளது.
18 படுக்கைகள் கொண்ட இந்த மையத்தில் ஆதரவற்ற மூத்த குடிமக்களை
சேர்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். இந்த மையம்
எளிமையானது, மிகவும் அத்தியாவசியமான
அடிப்படை வசதிகளை மாத்திரம் கொண்டது. ஜாதி,
மத, இனப்பாகுபாடின்றி எல்லோரையும் உள்ளடக்கிய
மையமாக உருவாக உள்ளது. இம்மையத்தில்
கீழ்கண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
1. சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகள்
2. சமூக மாற்றத்திற்காக பல்வேறு இயக்கங்களில் முழு
நேரப் பணியாளர்களாக பணியாற்றி தற்சமயம்
தனிமையில் வாழ்பவர்கள்.
3. சமூக செயல்பாட்டுக் குழுக்களில் பணியாற்றிய
செயல்பாட்டாளர்கள்.
வி.ஆர்.லட்சுமி நாராயணன் மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையத்தில் சேர
விரும்புவர்கள் தாங்கள் நேரிடையாகவோ அல்லது தங்கள் அமைப்பின்
பரிந்துரையுடனோ விண்ணப்பிக்கலாம். ஏழு பேர் அடங்கிய குழு ஒன்று
விண்ணப்பங்களை பரிசிலனை செய்து பயனாளிகளை தேர்வு செய்யும்.
இத்துடன் இணைத்துள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட
முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி சோக்கோ அறக்கட்டளை அறங்காவலர்
கு.ஓ.மிருணாளினி தெரிவிக்கிறார். இத்துடன் அதற்கான விண்ணப்பபடிவம்
படவடிவக் கோப்பாக (பிடிஎஃப்)இணைக்கப்பட்டுள்ளது.
பேரா.நாஸ்னின் பரக்கத்அலி கான்
அறங்காவலர்சோக்கோ அறக்கட்டளை
நீதிபதி பகவதி பவன்,
143, ஏரிக்கரைச் சாலை,
கே.கே.நகர், மதுரை – 625 020.
கு.ஓ.மிருணாளினி
அறங்காவல
சோக்கோ அறக்கட்டளை