- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)
- என்றும் காதல்!
- நஷ்ட ஈடு
- கீதாஞ்சலி (40) கனிவு மழை பொழியட்டும் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- உயிர் போகும் தருணம் குறித்து
- பெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- இணையம்
- பிறைநிலா அரைநிலா
- வேர்வாசிகள்
- மண்வாசம்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் -2 (The Great Pyramids of Egypt)
- ‘விஷ ‘ (ய) காந்த் சூளூரை…
- பெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை -1
- ஆண்களுக்கு காது குத்துதல் (தொடர்ச்சி)
- உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும்….
- முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 3 – முருகைக் கற்பாறைகள் (Coral reefs)
- சுதந்திரமாக எழுதுதல்
- வங்காளப் படம் : மலைகளின் பாடல்
- பாறையில் கசியும் ஈரம் ‘பறத்தல் அதன் சுதந்திரம் ‘ -கவிதைத்தொகுப்பு அறிமுகம்
- ஓவியம் வரையாத தூரிகை
- அ… ஆ… ஒரு விமர்சனம்
நளாயினி தாமரைச்செல்வன்.

____
அந்த புகை வண்டியில்
நட்பாய் ஓர் கரம்..!
என் பிரயாண சுமைகளை இறக்கி
என் குழந்தையையும்
தன் மடியில் வைத்துக்கொண்டான்.
அருகில் சிாித்த முகத்துடன்
அவன் மனைவி.
எனக்கு அவளை அறிமுகப்படுத்தி விட்டு
தன்னை அறிமுகப்படுத்தாமல்.!
நான் எனக்குள்
இவன் கண்களை எங்கோ பார்த்ததாய்
நன்கு பரீட்சயமானதாய்
யார் இவன் ?
நிறைய உரு மாறி இருப்பானோ ?
என்னை நன்கு தொிந்தவனாய்
எல்லாம் விசாாித்தான்.
மூளையின் ஒரு பக்கம்
இவன் பார்வையின் அலகுகள்
நிறைய இருப்பதை உணர்கிறது.
யார் இவன்… ?!
ஞாபக புத்தகத்தில்
இவன் அலகு தட்டுப்பட்டதில்
ஓ! இவன் என் முதல் கணவன்.
அந்த புழுதி மண்ணில்
மூக்கு வடிய
கொன்றைப் பூ பறித்து
இரு மாலை கட்டி
தென்னோலை புடுங்கி
தாலி செய்து
நானும்,இவனும்
மாலை மாற்ற
அயல்வீட்டு சிறுவர்,சிறுமியர்
பீப்பீப்பி, டும்டும்
என மங்கல வாழ்த்தொலிக்க
என் கழுத்தில் தாலி கட்டியவன்.
இவனுக்கு மண்ணில்
சோறு கறி சமைத்து
சிரட்டையில்
உணவு கொடுத்தேன்
எனது ஐந்து வயதில்.
நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து. 2000
—-
nalayiny@hotmail.com