- புத்தாண்டு விருப்பங்கள்
- மகாபலி
- காத்திருத்தலின் கணங்களில்…
- தொடரும்…
- என் பஞ்சபூதமே….
- தங்கப்பாவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்
- ‘புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! ‘
- மலரில் ஏனோ மாற்றம் ?
- புழுக்களும், இலைகளும்
- ஞாபக வெற்றிடங்கள்
- மலரும் மனமும்
- அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்
- கனடாவின் பிக்கரிங் கனநீர் அணுமின் உலையில் நேர்ந்த அபாயங்கள் [Pickering Nuclear Power Station]
- அறிவியல் துளிகள்-22
- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்
- தோணியும் அந்தோணியும்
- கூட்டணி
- உறவுகள்.
- பதுமை (நாடகம்)
- நிலா அழகாயிருக்கில்லே
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இரண்டு
- நினைத்தேன். சொல்கிறேன். Amway-யும் டெலி-மார்க்கெட்டிங்கும் பற்றி
- என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ?
- கடிதங்கள்
- கேன்சர் கல்பாக்கம்:
- யுத்தம் முடிந்துவிட்டது ?
- தமிழ்நாட்டின் கோவில் காடுகள் – 2
- அ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்!
- ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)
- Federation of Tamil Sangams of North America
- ஈராக் போர்- நான்ஜிங் படுகொலை (சீனா)
- தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்
- மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி…
- இயற்கையும் மனிதனும் (கனவுகள்-தமிழாக்கப் பாடல்கள். மொழியாக்கம்: தங்கப்பா.)
- அழுக்காறும் ஆவேசமும் (எஸ்.பொன்னுத்துரையின் ‘அணி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 57)
- ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை
கரு.திருவரசு

பழைய பாதையில் நடந்து நடந்து
மழையோ வெயிலோ தொடர்ந்து நடந்து
புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்!
புதி தமிழனைப் பாட அலைகிறேன்!
திரையின் படமோ அறைக்குள் வந்தது
தெருவில் நடப்பதைத் திரைகள் கணிக்குது
அறிவியல் தருகிற அணுக்க உறவுகள்
பிரிவுகள் கடந்த நெருக்கம் வளர்க்குது
மெத்தப் புதுமைகள் மேலும் வளர்ந்து
நித்தம் நித்தமும் வந்து குவியுது!
நானோ இன்னமும்
புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்!
புதி தமிழனைப் பாட அலைகிறேன்!
இறைவனை வணங்கு கிறானோ இல்லையோ
தலைவனை விழுந்து விழுந்து வணங்குவான்!
வணங்கி வணங்கி வளைந்து போனவன்
இணங்கி இணங்கி எதையும் இழப்பவன்
அவனுடன் பிறந்த பாவம் தொலைய
இவனுமா என்னும் கேள்வியைச் சாய்க்க
நானோ இன்னமும்
புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்!
புதி தமிழனைப் பாட அலைகிறேன்!
சேவை என்பதோ போர்வையாய்ப் போனது
பாவிகள் பலபேர் போதகர் ஆயினர்!
என்னையும் உன்னையும் இனத்தையும் கூட
என்ன அழகாய் ஏய்க்கிறார் சிலபேர்!
வித்தை தெரிந்தவர் மேய்ப்பர் ஆயினர்
மொத்தமாய் எல்லாம் மூச்சுத் திணறுது!
நானோ இன்னமும்
புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்!
புதி தமிழனைப் பாட அலைகிறேன்!
thiruv@pc.jaring.my