- டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு
- டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மை (Digital Rights Management) ((எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட 10 முக்கிய எதிர்காலத் தொழில் ந
- நான் பண்ணாத சப்ளை
- வரிகள்
- இந்த வாரம் இப்படி பிப்ரவரி 4, 2001
- (பாகிஸ்தானிலிருந்து ஒரு கடிதம்) மக்கள் விருப்பத்தை எதிர்த்து…
- ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 2
- டி என் ஏ என்ற டிஜிட்டல் ஆறு
- அவமானத்துடன் ஓர் அாிவாள்…..
- சிந்தாமணி கொட்லகெரெயின் கன்னடக் கவிதைகள்
- பி. ராமன் எழுதிய மலையாள கவிதைகள்
- நெடில்
- கடவுளே…கடவுளே…
- பின்-நவீனத்துக்கு முன்னும் பின்னும்
- குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -1
- இலக்கியமும் திரைப்படமும்–பாண்டிச்சேரி கருத்தரங்கு
மொழி பெயர்ப்பு ஜெயமோகன், நிர்மால்யா

(பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை)
1. கனம்
இல்லாதவற்றின் எடையெல்லாம்
உள்ளவை சுமக்க வேண்டும் என்று
ஓர் அறிவிப்பு
இவ்வழி சென்றது
அத்துடன்
பகல் முதல் அந்திவரை நீண்ட
இந்த இருப்பில்
இல்லாத வேலையின் கனத்தை
நான் அறியத் தொடங்கினேன்
இல்லாத துயரத்தின் கனம்
நீண்டு நிமிர்ந்து நிற்கும்போதுள்ள
இந்தக் கூனல்.
அடிக்களத்திற்கு கட்டிச் செல்லப்படும்
கதிர் குலைகள் போன்றது
இல்லாத காதலின் கனம்
இல்லாத சுதந்தரத்தின் கனமே
இந்த அலைச்சல்
இப்போது அருகிலெங்கும் இல்லாத
மரணத்தின் கனம்தான்
மச்சின் உத்தரத்தில் உள்ள
கொக்கி நோக்கி நகரும்
என் சபலப் பார்வை
இல்லாத தூக்கத்தின் கனம்
இந்தக் கொடுங்கனவு
அதற்குள்
சொற்களின் கனத்தால்
உதடுகள் தளர்ந்து விட்டிருந்தன
கனம் மட்டுமே இருந்தது
இல்லாதவற்றின் கனமெல்லாம்
உள்ளவை சுமக்க வேண்டும் என்று
ஓர் அறிவிப்பு
இவ்வழி சென்றது
உடைந்து விழுந்த சுமைதாங்கி
அதைக்கேட்டு
இல்லாத கவனத்தின் கனத்தை
காற்றின் மீது ஏற்றி வைத்தது.
***********
2. அன்னை
என்
குடத்தில்
நிறைய
நதிக்கு
ஒரு புன்னகையே
போதும்