- சொல்லடி…என் தோழி!!
- தியாகம்
- படைப்பு
- நான்கு கவிதைகள்
- பேதங்களின் பேதமை
- இரண்டு கவிதைகள்
- உன்னை நினைத்து………
- எது சரி ?
- பரிச்சியம்
- இரண்டு கவிதைகள்
- என்னவளுக்கு
- பழைய கோப்பை, புதிய கள்
- வெள்ளி மலையும் குமரிக் கடலும்!
- ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி நிலையத்தில் ஸோடியத் தீ வெடி விபத்து! [Sodium Fire in Japan ‘s Monju Fast Breeder Power Reactor]
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- அதிர்ச்சி (குறுநாவல்)
- வடக்குமுகம் ( நாடகம் )
- தண்ணீர்க் கொலை
- பிச்சேரிச் சட்டை
- முக்காலி
- பிறை நிலவுகள்.
- அல்லி-மல்லி அலசல் (2)
- புதிய வானம்
- புகையில் எரியும் இராமன்கள்..
- விடியும்! (நாவல் – 2)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பனிரெண்டு
- தமிழ்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 8
- மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்
- கடிதங்கள்
- பத்துக் கட்டளைகள்
- சிங்கராஜன்
- குறிப்புகள் சில 26ஜுன் 2003 (மார்க் போஸ்ட்ர், இணையம்-ஹாரி பாட்டரும் அறிவியலும்)
- வாரபலன் (பலதும் பத்தும்) ஜூன் 21, 2003
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -1
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -2
- பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -3 – மனித உரிமைப் போரில் மரித்த வீரர்: ஷகீல் பட்டான்
- உரிமையும் பருவமும் (கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 66)
- எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து
- அரசியல் பாடும் குடும்ப விளக்கு !(ஹே ராம் – கவிஞர் புதியமாதவியின் கவிதைகள் தொகுப்பு- முன்னுரை)
அனந்த்

மரபுப்பா என்றதும் மக்கள் மனத்தில் மறைந்தபழம்
பிரபுக்கள் மன்னர் பெரும்பெரும் செல்வர்கள் பேரிலன்று
கரடியாய்க் கத்தித்தம் கும்பியைக் காத்த கவிஞரெல்லாம்
பரப்பிய பல்லுடைப் பாநடை வந்து பயம்தருமே (1)
பயமினி வேண்டாம் பலப்பல காலமாய்ப் பஞ்சடைந்து
நயமெலாம் போன நடைகளைப் போக்குவோம் நாட்டினர்தம்
வயம்நமைச் சேர்த்தவர் வாழ்வினில் காணும் மரபைமக்கள்
வியப்புறும் வண்ணம் விளக்கிடும் பாக்களை விண்டுரைத்தே (2)
உரைத்திடு வோம்அவ் உழவனின் உப்பில்லா உண்டியினை
விரைந்து பறந்துகை வண்டி யிழுப்பவன் வேர்வையினை,
தரையில் படுப்பவன் சம்மட்டி ஏந்தும் சளைப்பதனை,
கரைந்தவர் வாழ்வைக் கழித்திடும் போக்கைக் களைவதற்கே (3)
களைத்துச் சலித்துத்தாம் கண்டதெல் லாம்பல காசுகளாய்
விளைத்துத் தருபவர் வேதனை யாலுயிர் விட்டிடலும்
திளைத்துத் திரிபவர் தேனொடு பாலையும் தேடுதலும்
முளைத்துக் கிளைத்திட்ட மோசங்கள் என்றினி மேலுணர்வோம் (4)
மேலிது கீழென மெத்தச் சுயநலம் மேலிடமுன்
ஓலையில் கண்ட(து) ஒதுக்கி இனியிங்கே உண்மையொடு
வேலை புரிபவர் மேல்பிறர் கீழென்ற மெய்யுணர்வோம்
பாலை மறைந்து பசுமை கொழித்திடப் பாரினிலே (5)
பார்க்கும் பொருட்களில் பாமணம் வீசிடும் பாங்குணர்ந்தே
ஆர்க்கும் அழகை அனுபவித் தாலாதன் ஆக்கத்தினால்
யார்க்குமே வந்திடும் எவ்வகைத் தானதோர் யாப்பினிலும்
சேர்க்கும் கவிதைத் திறமது செப்புவேன் திண்ணமிதே (6)
திண்ணையின் பக்கம் செழித்து வளர்ந்திட்ட செண்பகத்தின்
நுண்ணிய நாற்றம் நுகர்வது போல நுடங்கிநம்முள்
எண்ணரும் பூக்களாய் என்றும் அசைந்திடும் எண்ணமெலாம்
பண்ணெனும் வாசம் பரப்பிடும் பாங்கு புரிந்திடுமே (7)
புரிந்த மறுகணம் பொற்கவி வண்ணத்தில் பொங்கியவை
தெரிந்துநம் கைவழி தேனமுதாகத் தெறித்திடும்,ஓ!
அரிய புதுமை அதுதரும் ஆனந்தம் ஆரிடம்நாம்
பரிந்து விளக்கிடப் போகும் ? அதுவே பரவசமே! (8)
வசம்வரும் பாடல் வளத்தினால் மாபெரும் வையகத்தில்
அசைந்திடும் ஒவ்வோர் அணுவும்; அதன்விளை வாகநமக்(கு)
இசைந்திடும் பாருள இன்பங்கள் யாவும்; இதற்குமனக்
கசிவன்றி எந்தக் கவிவகை ஆகிடும் காரணமே ? (9)
ஆகநான் இங்கே அளித்த கருத்துகள் யாவும்உம்முள்
ஏகி ஒருசிறு எள்ளள வேனும் இனியகவித்
தாக மதனையே தூண்டிக் கவிவகை தாம்பலவும்
ஏகம் எனஎண்ணி ஏற்றிட வைக்கும் மரபினையே! (10)
(கோப்பையின் அமைப்பு: கட்டளைக் கலித்துறை அந்தாதி)
ananth@mcmaster.ca