- உயிர்த்திருத்தல்
- வளைந்து போன வீரவாள்
- தீவுகள்..
- அதீதப் புள்ளி
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-2)
- பெரியபுராணம் – 47 சண்டேசுர நாயனார் புராணம் தொடர்ச்சி
- பருவகாலம்
- நீள்கிறது கவலை
- பச்சை மிருகம்
- அவனது கவிதைகள்
- பிரிவோம்…சந்திப்போம்!
- தாயின் உயிர்க்கொடிகள்
- நான் மரணித்து விட்டேன்
- எது காதல் ?
- குடை வாசிக்கும் கவிதை
- கீதாஞ்சலி (30) கனவில் உன்னிசைக் கானம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- விண்வெளியில் செல்லும் வால்மீனுக்குப் பேரடி கொடுத்த பூமியின் எறிகணை! (Earth ‘s Deep Impact Space Probe Hits the Comet)
- புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1
- வங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி
- புட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்
- இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்
- இந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- விடிகின்ற பொழுதாய் கவிதை
- தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்
- AnyIndian.com நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு
கவிநயா

கண்டதும் கொண்ட காதல் போல்
சிலரைக் கண்டதும் விழித்துக் கொண்டு உறுமும் மிருகம்
அதோ அவளைக் கண்டால்
இந்தப் பச்சை மிருகம் இலேசாக அசைந்து கொடுக்கும்
இதோ இவனைக் கண்டால்
காலைத் தூக்கத்தை இழக்க விரும்பாத சுகவாசி போல்
ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்க்கும்
அதோ அந்தக் குடும்பத்தைக் கண்டு விட்டால்
வெண்கலக் கடையில் புகுந்த மது உண்ட யானையாய்
பிளிறி ஆட்டம் போட்டுத் துவம்சம் செய்யும்
சமயங்களில் நன்றி மறவா விசுவாசி போல்
ஒரே ஒரு வார்த்தைக்கே மதிப்புக் கொடுத்து
வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்து விடும்
தறி கெட்டுத் திரியும் விடலை போல்
மதி கெட்டு அலையும் தருணங்களில்
‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும் ‘ என்ற கதைக்கு மட்டுமே
கொஞ்சமாவது கட்டுப்படும் –
இந்தப் (பொறாமை என்னும்) பச்சை மிருகம்…
— கவிநயா
meenavr@hotmail.com