- அப்பாவிடம் என்ன சொல்வது ?
- மணி விழா காணும் ஜெயகாந்தன்
- காட்டில் ஒரு மான்
- ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்
- கணங்கள்
- அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்
- கா.ஸ்ரீ.ஸ்ரீ அமரரானார்
- பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்
- 21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை
- விழாவும் நாமும்
- சோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் ?
- மரியா
- உனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் ?
- மனிதர்-1
- சுழலும் மின் விசிறி
- பல்லி ஜென்மம்
- விழாக் கொண்டாட வருக
- மரப்பசு பற்றி அம்பை
- பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்
- அஞ்சலி
- திராவிட இயக்கங்களின் நாடகங்கள்
- சருகுத் தோட்டம்
- எங்கே மகிழ்ச்சி ?
- சூறை
- புலம்பல்
- வெள்ளைத் திமிர்
- இன்டெர்நெட்டில் திவசம்
- தமிழ் இனி 2000
- திருநெல்வேலி
- மார்ட்டின் எபனேசர் கவிதைகள்
- எனக்குள் ஒரு கனவு
- Boycott of Mission Schools
மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல் - ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்
- உலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை ?
- Reforming the Reform Process
- காந்தியார், பெரியார், சாதிகள்
- ஒரு நாத்திகனின் கவிதை
- பசுவைய்யாவின் கவிதைகள்
ரேகா ராகவன் கவிதைகள்
- அம்மாவின்காலங்கள்.
- பசுவய்யா கவிதைகள்
- வேட்டை
- அந்த முகம்
- பொன் மொழிகள்
- அந்தப் பையனும் ஜோதியும் நானும்
- உயிர் சுவாசிக்கும்..
- அவனுடைய நாட்கள்
- வேஷம்
ஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..
ஓவியத்தில் எாியும் சுடர்

அந்த ஓவியத்தில் எாியும் சுடரை
கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை
அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன
தன் விரல்நுனிகளால்
எாியும் சுடரைத் தொடத்
துடிக்கிறது அதன் மனம்
சுடர் அருகே
தன் விரல்களைக் கொண்டுபோன பின்பும்
தயங்கி
மிகத் தயங்கி
தன் தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிறது
அந்தக் குழந்தை
அந்தச் சுடர்
தன்னை எாித்துக்கொண்டே
ஓவியத்தை எாிக்காமல் இருக்கும் விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அந்தச் சுடர்
உருவாகி வந்தபோது
ஓவியாின் விரல்களை எாிக்காமல் இருந்த விதம்
அந்தக் குழந்தைக்கு விளங்கவில்லை
அழிக்காமல் எாியவும்
அழகாக நிற்கவும்
எப்படிக் கற்றுக்கொண்டது அது ?
குழந்தையின் விரல்களில் அப்போதும்
வியப்பு துடித்துக்கொண்டிருக்கிறது.
காற்றில் எழுதப்படும் கவிதை
அந்தப் பூ காற்றில் எழுதிக் கொண்டிருக்கும்
கவிதையின் பொருள் எனக்குப் புாியவில்லை
அது தன்னைப் பற்றி தன் அழகைப் பற்றி
எழுதவில்லை என்பது தொிந்த்து
அது துக்கம் கொண்டிருப்பது தொிந்தது
அந்த துக்கம் மாலையில்
தான் வாடிவிடுவது பற்றி அல்ல
என்பது தொிந்த்து
அது தான் பூத்த செடி பற்றியும்
கொடிகள் பற்றியும்
மரங்கள் பற்றியும்
எழுத விரும்புகிறது
அது வெயிலைப் பற்றியும்
காற்றைப் பற்றியும்
கடலைப் பற்றியும்
சொல்லத் துடிக்கிறது.
அது எழுத விரும்பாத விஷயம்
எதுவும் இல்லை என்று எனக்குப் பட்டபோது
என்னையும் சேர்த்துச் சொல்ல
விரும்புவாயா என்று
நான் அதனிடம் கேட்டேன்
அதன் முகத்தில் விசனம் படர்ந்தது
அதன் உலகத்தில் நான் இல்லை என்பதை
ஏற்றுக்கொள்ள எனக்குக்
கஷ்டமாக இருக்கிறது.
மின்விசிறிகள் சம்பந்தமாக ஒரு வருத்தம்
இந்த மின்விசிறிகளின் சுழற்சியில்
இவற்றின் விட்டம் அதிகாிக்க
வழியேதும் இல்லையென்பதை அறியும்போது
என் மனம் வருத்தம் கொள்கிறது.
பூமியை ஒருபோதும் இவை ஸ்பாிசித்தது இல்லை
என நினைக்கும்போதும்
ஒருபோதும் இவை வானத்தைக் கண்டதில்லை
என எண்ணும்போதும்
வருத்தம் என் மனதைக் கவ்வுகிறது.
இந்த மின்விசிறிகளின் சுழற்சியும் சாி ஓய்வும் சாி
இவற்றின் கையில் இல்லை என்பதை உணரும்போது
என் மனத்தில் சங்கடம் படர்கிறது.
தாம் வேர்வை ஆற்றுபவர்கள்
யார் என்பதைக்கூட அறியாத
மின்விசிறிகள் இவை.
வாழும் கணங்கள்
—————
மூளை நரம்பொன்று அறுந்து
ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது
மனவெளியும் நிலவொளியில் குளிர
செவிப்பறை சுயமாய் அதிர
மண்ணில் ஒருபோதும் கேட்டிராத
ஓசை உபகைகள் எழும்பின
பாஷை உருகி ஓடிற்று
ஒரு சொல் மிச்சமில்லை
என் பிரக்ஞை திரவமாகி
பிரபஞ்சத்தின் சருமமாய்
நெடுகிலும் படர்ந்த்து
ஒரு கணம்தான்
மறு கணம்
லாாியின் இரைச்சல்
எதிரே காலி நாற்காலி.
Key-in : Rekha Ragavan
| திண்ணை
|