- அப்பாவுக்கு…!!!
- அன்புடன் இதயம் – 21 – பிரிகின்றேன் கண்மணி
- கடலைக்கொல்லை
- கவிக்கட்டு – 11 : எங்கே மனிதம் ?
- உறங்கட்டும் காதல்
- நிகழ்வெளியின் காட்சிகள்
- நிழல் பாரங்கள்
- வீடு திரும்புதல்
- ஆயுட் காவலன்
- கவிதைகள்
- தூரம்
- அவர்கள்
- தன்னம்பிக்கை
- இல்லம்
- தீர்மானம்
- தமிழவன் கவிதைகள்-பத்து
- உடன் பிறப்பு…
- குழந்தை மனது
- நம்பிக்கை
- கவிதைகள்
- செல்பேசிகளைத் தெரிந்து கொள்வோம்!
- மின்மினி பூச்சிகள்
- திரைகடல் நாடியும் தேடு மின்சக்தி! [Energy from The Ocean Waves, Tides & Thermal Power]
- நெய்தல் நிலத்துக்காாி!
- பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)
- அஞ்சலைப் பாட்டி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 24
- சாயம்
- தென்னையும் பனையும்
- வெற்றுக் காகிதங்கள்
- மஸ்னவி கதை — 10 :அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- தனக்கென்று வரும் போது..!
- மலை (நாடகம்)
- பாசமா ? பாசிசமா ?
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும்
- சித்திரவதை
- டயரி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 7)
- வாரபலன் – ஜூன் 17,2004 – டில்லிக்குப் போன கவுன்சிலரு , ஆயிரம் இதழ் கண்ட கலா கெளமுதி , வாத்துக்களின் வட்டார வழக்கு , அஞ்சலி : காச
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 9
- மிராண்டாவைப் பார்த்து மிரண்டவர்கள்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 4
- நிழல் யுத்தம் பற்றி
- தமிழுக்குப் பெருமை
- என் பொழுதுகளில் இதுவும்..
- வெங்கட் சாமிநாதனுக்கு டொராண்டோ பல்கலைக்கழத்தின் இயல் விருது விழா
ஸ்ரீமங்கை

என்னிலும் வெளிப்பட்டு,
சூனியங்களில் எதிரொளித்து…
என்னோக்கியே நீழும் நிழலே..
வெளியேற்ற எத்தனிக்கிறேன்..
உனது பாரங்களில்
நான் குனிந்து முனகுவது
பிரசவமென அறியாது
பரிகசிப்பவரைப்
புறக்கணித்தபடி..
முன்பொருநாள் ஓர் ஞானி
என் வேர்களில் புலம்பினான்.
‘என்னுள் புதைந்த குற்ற உணர்வே!
உறைந்த உப்புக்கட்டியாய் கரித்து
குமட்டிய உன்னை,
உறக்கமில்லாத இரவுகளின்
கறுமையில் ,யாருமறியாதே
காடியில் உன்னைக்
கரைத்துக் கரைத்து
கண்களினின்று வெளியேற்ற
எத்தனித்து தோற்றேனென
எனது அலுப்புகளை
எங்கே இறக்கிவைக்கட்டும் ? ‘
எனது நிழல்கள்கூட அக்குரலின் பாரத்தில்
வளைந்தனவென நான் விம்மியது
எவருக்கும் கேட்கவில்லை.
என் தண்டுத் தோல்களில் பாலுண்ணிகளாய்
இச் சாறுண்ணி நாய்க்குடைகள்…
அழகென அயலார் அதிசயிக்க
எனது வலிகள் யாருக்குப் புரியும் ?
நஞ்சூறிய நாய்க்குடையே!
மலராவாயென உனை மொட்டாகத் தரித்த
என் முட்டாள்தனங்களில்..
மகரந்தங்களென மயங்கிய
பூச்சிகளைச் சுவைத்து
இரத்தத் தேனை
தண்டுகளருந்த அனுப்பிவைக்கும்
உன் குரூரங்களில் கூசியபடி,
அருவெறுக்கிறேன்,நான் எனையே..
இறந்துவிடு!
உனது மலர்வுகளில், இதுகாறும்
நான் காத்து வைத்த
மலட்டுத்தனங்களூம் மடிந்தனவென்ற
இழிசொல் எனக்குவேண்டாம்.
ஓ ..வெளியேறிவிடு
ஏதோவொரு வகையில்..
உதடுகள் கோணிக்கொள்ளூம்
சிறு துடிப்பாய்,
நாசிகளின் விரிவாய்,
சூடாக ஒரு சொட்டு விழிநீராய்..
விரல்களின் நடுக்கமாய்…
எப்படியாவது..
என்றாவது…
—-
kasturisudhakar@yahoo.com