- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10
- தாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை !
- போலீஸ்காரன் மகன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது
- வள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்? எதைத்தான் கேட்டோம்?
- நான்கு கவிதைகள்
- எதைத்தேடி?
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5
- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- வேதவனம் விருட்சம் 5
- வழியும் தெரியாத உன்னை
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1
- நாளைய உலா
- காதிலே கேட்ட இசை
- உண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4
- குகைச் சித்திரங்களின் அவுலியா
- நிரந்தரம் இல்லா நின்மதியில்……
- ஒரு சோம்பேறியின் கடல்
- பிறர்தர வாரா
- தவிர்க்க முடியாதவைகளாய்…
- புளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்
- புதுக்கவிதை அரங்கம்
- நினைவுகளின் தடத்தில் – (19)
- மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.
- ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..
- சாகாத கருப்பு யானை
- மலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்
- உள்ளிருந்து கேட்கும் குரல்!
- துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்
- பாரதி கலை மன்றம் பஹ்ரைன்
- ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து
- ‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு
- TamFest 2008 – An Evening of Fun and Galatta
- நடுநிசி
- போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !
பட்டுகோட்டை தமிழ்மதி
மஞ்சவயல் திருவிழாவிற்கு
மாட்டுவண்டியில் புறப்பட
மாட்டுக்கால்களின்
முன்பின் இயக்கம்
வண்டிச்சக்கர்ங்களின்
சுழலியக்கம்.
அன்றைக்கு அது
ஆற்றல்மாறா கோட்பாட்டின்
ஆசைப்பயணம்.
வயலில் ஏர்க்காலை நகர்த்த
உழவுமாடுகளோடு
பத்துக்கால் பயணம்.
கிணற்றடி நீரள்ள
இரண்டு மாடுகளோடு
ஏற்றம் ஓட்டிய
இனியப் பயணம்.
இப்போதெல்லாம்
உழ
ஊருக்குப் போக
நீரிறைக்க என
நிலமெல்லாம் எந்திரங்கள்.
அன்றைக்கு
சொன்னதைக் கேட்கும் சோடிமாடுகள்
கைகளில்.
இன்றைக்கு
ஒன்றை பிரிந்த ஒற்றை மாடாய்
அடுத்தவன் கைகளில்.
இப்படி ஆதாயம் தேடி
ஆயிரமாயிரம் மையில் பயணம்.
பள்ளமேடு தெரியாமல்
பறக்கிற பயணம்.
கரைசேர
கையில் உயிரைப்பிடித்துகொண்டு
கடலில்
அலைத்துரும்பென
அகதிகளின் பயணம்.
அக்கரையில் கைத்தட்டினால்
இக்கரையில்
இரண்டுமுறை கேட்கும்தான்.
சிலநேரம் இப்படி
ஒளிந்துதான் போகிறது
ஒலியின் பயணம்.
சொந்தமன்ண்ணில் இழந்தவைகளை
வந்தமண்ணில் பெற
வந்தாரை வாழ்வைக்கும் மண்
இதுதான் என
எண்ணுகிறது இதயம்.
எங்கோ நின்றாலும்
இருந்த மண் காண
போகிறது பயணம்.
அங்கே
இன்றும் போரென
நிற்கிறது இதயம்.
ஒருவர் கை ஒருவர் பிடித்து
உறவுகளை காண
ஊருக்கு போகும் நேற்றின் பயணம்
அந்த மண்ணில்
இன்று
காலடிகளில் கண்ணிவெடிகளாய்
சிதறிக் கிடக்கிறது.
ஆகவே அந்த மண்ணில்
இன்றில்லாத
நேற்றின் பயணம்
நாளை தொடரட்டும்.
வரும்
தலைமுறைகளின் பயணம்
தலைநிமிர்ந்து நடக்கட்டும்.
நலமாய் நடக்கட்டும்
அவர்களின்
நாளைய உலா.
/ சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 –ன் கவிதை நேரத்துக்கான இவ்வார தலைப்பு நாளைய உலா, 20-09-08 /
பட்டுகோட்டை தமிழ்மதி
thamiizhmathi@gmail.com