- காலாக்ஸி குவியீர்ப்பு நோக்கியில் கருஞ்சக்தி திணிவு ஆய்வு (First Use of Cosmic Lensing to Probe Dark Energy) (ஆகஸ்டு 19, 2010)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -1
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 10
- முள்பாதை 44
- பரிமளவல்லி : 9. ‘கெம்-சேஃப்’
- புறநகர் ரயில்
- மேலாடை
- Vimbam 2010 – 6th International Tamil Short Film Festival
- ஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்
- செல்வக் களஞ்சியங்கள்
- மொழிவது சுகம்: பெயரில் என்ன இருக்கிறது?
- கண்ணதாசனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள்
- பார்சலோனா (1)
- ஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள்
- கிருட்டினம்மா
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி … கட்டுரை பற்றி
- ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 5
- தோழி
- தூறல் மழைக் காலம்
- Konangal Next Screening
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -10
- என்றென்றும் ஊழியர்கள்
- சில்லரை
- நிழல்
- எஸ் ராமகிருஷ்ணன் புத்தகங்கள் வெளியீட்டு விழா – மதுரை
- ஸ்ட்ராஸ்பர்க் இலக்கிய விழா
எம்.ரிஷான் ஷெரீப்

குளிர் காற்றினூடான வானம்
இளநீலம்
மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை
அமானுஷ்ய ஈரத்தோடு
தளிர் விட்டிருக்கும் அகத்தி
பெண் நெற்றிப் பொட்டு வடிவ
பச்சை நீளிலை மரத்தில்
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்
ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்
தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்
அதன் பிண்ணனியில்
மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்
நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்
-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை