This entry is in the series 20030828_Issue

பவளமணி பிரகாசம்


திருத்தமான வட்ட முகமொன்றை
வானத்திரையில் வரைந்து விட்டு
வெள்ளை வண்ணம் குழைத்துப் பூசி
ரசித்த ஓவியனும் திருட்டி கழிந்திட
ஒத்தையாய் கருப்பில் ஒரு பொட்டு
வைத்திட மறந்ததால் பதறினான்
பிடித்திட்ட தூரிகையை உதறினான்
ஆஹா! வானில் எத்தனை தாரகை!

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation