- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10
- சுவர்க்கம்
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றல் படைத்த பூதக் காந்த விண்மீன் புரியும் பாதிப்புகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -4
- “மாற்றம்”
- தமிழ் சேவைக்கு இயல் விருது.
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஐந்தாவது அத்தியாயம்
- திமிர் பிடிச்சவ
- கதைசொல்லி சாதத் ஹசன் மண்டோவின் மறுபக்கம்
- மரமணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)
- எழுத்தாளர் “நிலக்கிளி” அ.பாலமனோகரனின் “BLEEDING HEARTS” நூல்
- பட்டறிவு
- வேத வனம் விருட்சம் 36
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -38 << ஆயிரம் விழிகள் எனக்கு >>
- சங்கச் சுரங்கம் – 16: நெடுநல்வாடை
- ஞாபக வெளி
- விமர்சனக் கடிதம் – 1 ( திரு.பாரதிமணியின் ‘பல நேரங்களில் பலமனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து)
- நிழலாடும் கூத்துகள் : களந்தை பீர்முகம்மது எழுதிய ‘பிறைக்கூத்து’ நூலுக்கு கவிஞர் யுகபாரதியின் முன்னீடு
- மகாகவியின் ஆறுகாவியங்கள் வெளியீடு
- மலைகளின் பறத்தல்
- மலையாள இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை: “வைக்கம் முகம்மது பஷீர் -காலம் முழுதும் கலை”
- பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ர·பி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- நாகூர் ரூமியின் இலக்கிய அறிவு
- பேராசிரியர் நாகூர் ரூமிக்கு பதில்கள்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 3
- என்றாலும்…
- வயதாகியும் பொடியன்கள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தேழு
- ஸெங் ஹெ-யின் பயணங்கள்
- விருட்ச துரோகம்
- வைகைச் செல்வியின் ஆவணப்படம் வெளியீட்டுப் படங்கள்
தமிழ் இலக்கியத் தோட்டம்

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் மே மாதம் 24ம் தேதி நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் அம்பை. அவருடைய நூல்கள்: அந்தி மாலை , சிறகுகள் முறியும் , வீட்டின் மூலையில் ஒரு சமையலறை , காட்டில் ஒரு மான் , வற்றும் ஏரியின் மீன்கள் , ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea , In a Forest, a Deer ஆகியவையாகும்.
தன்னுடைய ஏற்புரையில் அம்பை, ‘ என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ”உண்மகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது. இந்த வெளிப்படை-மறைப்பு இவற்றின் கண்ணாமூச்சிதான் இலக்கியம்’ என்று கூறுகிறார்.
இயல் விருதை தொடர்ந்து வேறு விருதுகளும் வழங்கப்பட்டன:
புனைவு இலக்கியப் பிரிவில் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ நாவலுக்காக தமிழவனுக்கும், அபுனைவு இலக்கியப் பிரிவில்
‘இலங்கையில் தமிழர்’ நூலுக்காக முனைவர் முருகர் குணசிங்கத்துக்கும், கவிதைப் பிரிவில் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதை தொகுப்புக்காக லீனா மணிமேகலைக்கும், தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனைக்கான சுந்தர ராமசாமி நினைவுப் பரிசு சுரதா யாழ்வாணனுக்கும், மாணவர் புலமைப் பரிசில் அஞ்ஜெலா பிரிட்டோவுக்கும் வழங்கப்பட்டன.
இந்த விழாவுக்கு பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.