- கிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்
- புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006
- இலை போட்டாச்சு! – 5 – அவியல்
- ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை
- ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்
- சிங்கப்பூர் கணையாழி விருது-2006
- ‘இளைஞர் விழிப்பு’
- எது ‘நமது’ வரலாறு?
- அரபுநாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்
- கற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)
- கடித இலக்கியம் – 35
- ஜார்ஜ் ஒர்வலின் 1984
- சுயம்பிரகாசம்
- ஒன்று ! இரண்டு ! மூன்று !
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.
- அவல்
- புதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)
- பெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- இயான் ஹாமில்டன் கவிதைகள்
- மனு நீதி
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 14
- மடியில் நெருப்பு – 15
- தமிழன் (கி . மு . 2000, கி . பி . 2000)
- புதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை
- சூபியின் குழப்பம்
- ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை
- ம ந் தி ர ம்
- எஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)
- தேவதையின் கையில்
- கீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்!
- அளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..
- சுஜாதா பட் கவிதைகள்
எஸ் என் நடேசன்

அரசியல்வாதிகளையும் அரசியலையும் நகைச்சுவையாய எள்ளி நகையாடும் விலங்குப்பண்ணை எழுதிய ஜோர்ஜ் ஓர்வலின் புகழ்பெற்ற மற்றய நூல் 1984. இது சர்வாதிகாரகளின் இராச்சியத்தின் மனிதர்களின் அடிபடை உணர்வுகளான சிந்தனை, கனவுகள் மற்றும் ஆண், பெண் உறவுகள் எப்படி கட்டுப்படுத்தப்படும், குற்றமாக்கப்படும் என்பதை எடுத்துக்காட்டுகின்ற சிரஞ்சீவியான நூலாகும்.
இந்த கதையை நாடகமாக த.அக்ரேர் காங் (THE ACTORS GANG எனும் நாடக கம்பனி அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சலில் இருந்து வந்து, மெல்பேர்ண் சர்வதேச கலைவிழாவில் (MELBOURNE INTERNATIONAL ARTS FESTIVAL)) ல் மெல்பேன் ஆர்ஸ் தியேட்டரில் மேடை ஏற்றினார்கள்.
ஓவலின் கதையில் வரும் வின்சர் சிமித் கட்சியின் பிரசார பகுதியில் வேலை செய்பவன். கட்சியின் பெண் உறுப்பினர் உடன் அவன் கொண்ட உறவு வெளிபடையாக தெரியவரும்போது கைது செய்யப்பட்டு மற்றய கட்சி உறுப்பினர்களால் சித்திரவதைக்கு உள்ளாகிறான். வின்சன் சிமித்தின் பாத்திரத்துடன் கட்சி உறுப்பினர் நால்வர் (ஒரு பெண் உட்பட) நடிக்கும் இந்த நாடகம் மிகவும் அற்புதமாக, நாவலின் கதையை பின்நோக்கி நகர்த்துகிறது. நாடகத்தி¢ல் சித்திரவதை செய்யும் நால்வருமே வின்சன்ரையும் அந்த பெண்ணின் பாத்திரத்தை நடிக்கிறார்கள். கதை வெகுவேகமாக சினிமாபோல் நகர்கிறது. இரண்டேகால் மணிநேரம் மேடையில் வின்சன்ட் பாத்திரமாக ஒரு பெனியனோடு மேடையின் மத்தியில் நிற்கும் அடம் வால்ஸ் (ADAM WALSH)தனது உடல் நடுக்கத்தை நிறுத்தவில்லை.
எப்படி பிரசாரம் உண்மையை மறைத்து பொய்மையான எதிரிகளை உருவாக்கு மனிதர்களின் உணர்வுகளை தூண்டி, தேவையற்ற போருக்கு தயாராக்குவது என்பது ஜோர்ஜ் ஓர்வெலிஸ் 1984 மிக அழகாக காட்டப்படுகிறது. அப்படியான பிரசார உத்திகள் விசுவல் முறைகளால் இந்தமேடையில் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமாவை பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு நாடகங்கள் பழமையாக அலுப்புத்தட்டும். இங்கே ஒரு விறுவிறுப்பான சினிமாப்படமாக 1984 பின்னோக்கி விசுவல் மற்றும் சவுண்ட் உதவியுடன் விரிகிறது.
இந்த நாடகத்தின் தேவை சமகால கட்டத்தில் உள்ளது. தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் பிரசார கயிறு திரிப்புகள், எங்கள் ஊர் அரசாங்க, புலிகளின் பொய்கள் என்பன இந்த நாடகம் பார்த்த எனது மனக்கண்ணில் விரிந்து மறைந்தது.
மெல்பேனில் பெஸ்ரிவலில் நடந்த எல்லா நாடகங்களிலும் இதுவே மக்களை கவர்ந்ததும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த நாடகமாகும்.