- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40
- ‘போரோடு ‘ ஒரு போர். ( ‘Bohr ‘s Model and Theoretical Warfare on Quantum Mechanics)
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- பாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு
- அல்லி-மல்லி அலசல்- பாகம் 5
- யாரிந்த Dick Cheney ?
- சென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)
- ஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்
- எஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? – பகுதி 1
- அ.முத்துலிங்கம் பரம்பரை-3
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை
- மெய்மையின் மயக்கம்-20
- உரத்த சிந்தனைகள்- 2
- நான் பாடகன் ஆனது
- மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)
- விவாகரத்து
- வாலிபத்தின் வாசலில்
- சாகா வரம்
- காட்டு வழிக் காற்று
- உறவெனும் விலங்கு
- கவிதைகள்
- தங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- அவள்
- பெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- பழைய வேட்டி
- வேலிகள் உயரும்
- காற்றுப் பை…
- உன்னைச் சுற்றி உலகம்
- சாமிக்குத்தம்
- ‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்
- தனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- ‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.
வந்தியத்தேவன்

நேந்துக்கிட்டதை நேர்த்தியா முடிக்கோணுமில்ல ?
அம்ம வாத்த புள்ளைய ஆத்தா காப்பாத்துன்னு
ஒண்ணாத்தானே கூவினோம் ?
விசனப்பட்டாள் மனைவி
மூணாந் தண்ணி முடிஞ்ச கையோட
சிதறுகா அடிக்கறோமுன்னு கதறினோமே
மூணு மாசதுக்கப்புறமும் போவ முடியலியே
ஆத்தா கோவம் ஆவாதுங்க
அண்ணாநகரில் புது அபார்ட்மெண்ட்
ஆயிரம் சித்தாட்களில் ஆறுமுவம் ஒருவன்
ஆத்தா கடன் தீர்க்க தேவையென்னவோ
அரைநாளு விடுப்புத்தான்
என்னா கலீக்டருன்னு நினப்பா ?
ஒப்பந்த மேஸ்திரி
ஸ்டாலினாய் கொக்கரித்தான்
நாள் கூலியில்தான் காயும்
வீட்டின் உலை
இல்லாவிடில் வயிறு
இன்னைக்கு முடிச்சிடுதேன சொன்னாலும்
குழப்ப முடிச்சில் ஆறுமுவம்
குஷியில் மனையாள்
கூரைத்தள வேயும் நாள்
கூவி சேவலழலைக்கு முன்னே
கூலி சேவகம் செய்ய ஆறுமுவம்
கலவையெந்திரம் அவனின் கவலை அறியவில்லை
காலம் கரைந்தது
பாக்கெட்டில் பத்துரூவாய்
காரணத்துடன் கனத்தது
ஆத்தாவைவிட பயமுறுத்தினாள் மனைவி
களைப்புடன் ஊர்ந்தான்
வேல் நிறுத்திய தெருக்கோயில்
அருகே பரிச்சயமான பிச்சைக்காரன்
எட்டுமாதமாய் எட்டிப்போன பாதைதான்
தானத்தைப் பசி தோற்கடிக்கும் அவலம்
பொட்டிலடிபட்டதுபோல் சிலிர்த்தான் ஆறுமுவம்
வெத்திலப்பாக்கு மடிப்பிலிருந்து
விபூதி குங்குமம் பூசி
கடனடைத்த பெருமையில் பெண்டாட்டி
சக்கரக்கட்டை பிச்சைக்காரன் மட்டும்
பத்து ரூபாயை பார்த்து இன்னும் குழம்பியபடி
t_sambandam@yahoo.com
http://vanthiyathevan.blogspot.com