- வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி
- வேம்பு
- ஒரு மயானத்தின் மரணம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14
- தொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
- புலம் பெயர் வாழ்வு (6)
- உயிரா வெறும் கறியா ?
- வாசிப்புக் கலாசாரம்
- சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்
- ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?
- தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)
- இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)
- கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கவிதை
- பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அலறியின் கவிதைகள்
- முதலாம் பிசாசின் நடத்தை
- நினைவலையில் காற்றாலை
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்
- பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்
- மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்
- புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்
- கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை
- மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
- அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

என்னுள்ளத்தின் ஆழத்தில்
அப்பெண்மணி
எப்போதும் தங்கி யிருப்பாள்!
மங்கிடும்
அந்தி நேரத்திலும்
கணப் பொழுது மின்மினியாய்
காட்சி அளிப்பாள்!
காலை யிளம் ஒளியில்
மூடிய
முகத்திரை என்றும்
அகற்றாத பெண்ணவள்!
அப்பெண் மணியை
கடைசிக் கொடையாக
என்னிறுதிக் கானத்தில்
பின்னி எழுதி
உன்னிடம் கொடுப்பேன்
காணிக்கையாக,
என்னரும் இறைவா!
கன்னி அவளைக்
காளையர் காந்த மொழிகளும்
கவர முடியாமல் தோற்று
விட்டன!
கட்டாயப் படுத்தி ஆசைக்
கரங்கள் நீட்டி
எவரும் தொட முடியாத
எட்டா நிலையில்
கிட்டாம லிருந்தாள்!
நாடு விட்டு நாடாக
ஓடித் திரிந்த போதெல்லாம்,
என் நெஞ்சத்தில்
கூடவே குடியிருந்தவள்!
வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில்
வளமை, வறுமைத் தேய்வுகளில்,
உழன்று பிழைத்த
பெண்ணவள்!
எண்ணத்திலும் எல்லாப் பணிகளிலும்
எனக்கு
உடனா யிருந்த
மடந்தை யவள்
என்னரும் இறைவா!
தூக்கத்திலும்
நீளும் கனவிலும் என்னை
ஆளும் பெண்ணவள்
ஆயினும்,
தனியாய் எவருடன் ஒட்டாமல்
வாழும்
வனிதை அவள்!
மனிதர் விரும்பி ஆசையுடன்
வீட்டுக் கதவைத் தட்டினும்,
வெறுப்புடன் வேண்டாது
மறுத்து விட்ட மங்கையவள்!
அப்பெண்ணை எப்போதும்,
நேருக்கு நேராக
நோக்கியவர்
யாருமில்லை உலகில்!
உந்தன் கவனம் பெற்றிடவே,
சோர்வுடன்
காத்துக் கிடந்தாள் அங்கே,
ஏகாந்த நிலையில்,
என்னரும் இறைவா!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (March 27, 2006)]