- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-4)
- நேசிக்கிறேன்
- லேஸர், மேஸர் ஒளிக்கதிர்கள் ஒப்பற்ற புதிய ஒளிக்கருவிகள்-1 (New Tools Laser & Maser Beams)
- கடல் ஓதம்
- புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் 02
- கருணைக் கடவுள் குஆன்யின்
- இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அவமான விதிகள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணனை நினைவு கூர்வோம்
- ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 2
- பங்குக்கு மூன்று பழம்தரும் எழுத்து – சுகுமாரனின் திசைகளும் தடங்களும்
- முளைத்த பல்
- நீள்கவிதை – மொழிப் பயன்பாட்டின் கொள்கலங்களும், கொள்ளளவுகளும்
- குறுநாவல் தொடர்ச்சி – கானல் நதிக்கரை நாகரிகம் (2)
- கண்மணி அப்பா (அல்லது) அப்பாவின் கண்மணி
- மரக்கலாஞ்சி மாஞ்சிளா
- நிதானம்
- மேடைப்பேச்சு
- இது பொய்யா ?
- கூவிய சேவலின் சரிவர முடிவு
- கீதாஞ்சலி (32) விடுதலை வேண்டும்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெண்மை
- ‘விண்மீன் விழுந்த இடம்;’-கவிஞர் கடற்கரய்யின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு குறித்த சில கருத்துப் பதிவுகள்-
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மூர்க்கத்தன மானவை
எனக்கு
நேர்ந்த இடையூறுகள்! ஆயினும்
நெஞ்சு வலிக்கிறது,
தடைகளை
உடைக்க முயலும் போது! நான்
வேண்டுவ தெல்லாம் எனக்கு
விடுதலை! அது
வருமென எதிர்பார்த்து
நம்பி யிருப்பது
பெரும் வெட்கக் கேடு!
திண்ணமாய்ச் சொல்வேன்,
விலை மதிப்பில்லாச்
செல்வம்,
உன்னிடத்தில் உள்ளது!
நம்புதற் குரிய எனது
உன்னத
நண்பன் நீதான்.
ஆயினும்
என் வீடெங்கும் நிரம்பி
மின்னும் தோரணரங்களை
நீக்க மனமில்லை
எனக்கு!
மண்தூசியும் மரணமும் மேவி
என்னைப் போர்த்தி யுள்ள
அழியும் தோலை
அறவே வெறுத்தாலும்,
தழுவிக் கொள்கிறேன்
வாஞ்சையோடு!
பெருகிப் போயின எனது
கடன்கள்!
பேரளவில் எனக்குத்
தோல்விகள்!
கனத்துப் போனவை,
நாணப்படும்
எனது இரகசி யகங்கள்! ஆயினும்
உன்னிடம்
நன்னெறி வேண்டி வரும் போது
நடுங்கிடும் எந்தன் நெஞ்சு,
வேண்டுவதை நீ அளித்து
விடுவாய் என்று!
ீ
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 17, 2005)]