- வேதாளம் கேட்ட கதை
- அநாதை
- இவள் அவளில்லை ?.
- வேண்டுதல்
- பனி
- உலகம் உன்னை….
- காலமும் பயணியும்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6
- முக்கால் வயது முழுநிலவு
- அப்பா!
- தாமதம்
- சர்க்கரை
- நான் நானாக …ஒரு வரம்
- நிலவு
- இன்று நாமும் குழந்தையும்
- அறிவியல் மேதைகள் வோல்டா (Volta)
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர்[Lise Meitnar](1878-1968)
- வெற்றிடத்தை அறிதல் குறித்து
- இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்)
- Europe Movies Festival
- கள்ளர் சரித்திரம்
- கைது செய்யப்பட்ட விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்களை விடுதலை செய்யவேண்டும்
- தப்பிக்க இயலாத பொறி (எனக்குப் பிடித்த கதைகள்- 38 -தி.ஜானகிராமனின் ‘கண்டாமணி ‘)
- Europe Movies Festival
தா.பாலகணேசன்

பயணிகள்
எவ்வளவு ஆசையோடு கேட்கிறார்கள்
தங்கள் முகவோவியங்களை வரைந்து தருமாறு
செம் பொன் சுடர்கள் படர்
தேமலெனத்திகழ்
செய் நதிக் கரையின் ஓவியர்களிடம்
எனதும்
எனை யொத்த நண்பர்களினதும்
உடைந்து, சிதறுண்ட பிம்பங்களினை
ஆற்று நீரலைக் கரங்கள்
எடுத்தும், ஏந்தியும் சிரிக்கையில்…
ஆற்றின் வழி வழியும்
இரகசிய இருப்பின் செளந்தர்யத்துள்
காற்றின் வெளி விரிந்து
காலங் கடந்து வீற்றிருக்கின்ற அற்புதத்துள்
நானுமோர் பயணியே
காலத்தைப் போலவே
எனதும்
எனையொத்த நண்பர்களினதும்
சுக துக்கங்கள்
எனது முகத்தை வரைந்து தாவென
கால ஓவியனிடம்
என்ன கேட்க வேண்டியிருக்கிறது;
அவன் தானே மிகப் பெரிய ஓட்டியாயிற்றே.
***
தா.பாலகணேசன்
கோடை கால மாலை
19.ஆடி.2002