- நேற்று இல்லாத மாற்றம்….
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- விடியும்! நாவல் – (7)
- கோயில் விளையாட்டு
- அன்னை
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- நெஞ்சினிலே….
- ஒரு தலைப்பு இரு கவிதை
- உழவன்
- மொய்
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- ஹைக்கூ
- கம்பனும் கட்டுத்தறியும்
- கூடு விட்டு கூடு…
- ஊனம்
- வாழ்க்கை
- மனமா ? மத்தளமா ?
- முற்றுமென்றொரு ஆசை
- சந்தோஷமான முட்டாளாய்…
- ஒற்றுப்பிழை
- விசுவரூப தரிசனம்.
- வாழ்க்கையும் கனவுகளும்
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- கடிதங்கள்
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- தமிழாக்கம் 1
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- விமரிசன விபரீதங்கள்
- கலையும் படைப்பு மனமும்
அனந்த்

கம்பனைப் பற்றி எழுதுங்கள் கவிதை தானாய் வந்துவிடும்
நம்புதற் கரிய கற்பனைகள் நடனம் செய்தே நாடிவரும்
உம்பல மெல்லாம் ஓங்கிவரும் உவகை உள்ளே ஊறிவரும்
கும்ப நிறைதேன் குடித்ததுபோல் குதித்துத் தலையும் கிறுகிறுக்கும்
சொல்லுடன் அசையும் சீர்தளையும் தொடையும் அணியும் துணைபுரியும்
கல்லதுங் கனியும் கவிதைநயம் கதித்(து)உம் வசமாய்ப் பணிபுரியும்
புல்லரித் துலக முழுதுமிது புதுமை எனவே புகழ்ந்துரைக்கும்
நல்லவர் வாழ்த்தி ஆசிதரும் நலமும் உமக்கு வாய்த்துவிடும்
கற்பினுக் கணியாம் சானகியின் கதையை வரைந்த கம்பனது
சொற்களு மியல்பாய் உம்கவியில் சுகமாய் வாசம் புரியவரும்
உற்றிடும் உணர்வோர் எல்லையிலா உயரம் பறந்து சிறகடிக்கும்
கற்றிடக் கம்பன் படைப்பையன்றிக் கணமும் நினையா நிலைபிறக்கும்
அம்பலம் ஏறும் அருங்கவிதை அனைத்தும் படைக்கும் ஆற்றல்வரும்
எம்பெரு மானின் கருணையுட னினிதாய் அமைதி கூடிவரும்
உம்பரை விஞ்சும் உத்தமனின் உயர்வை உரைத்த கவியரசன்
கம்பனுக் கிணையா யிவ்வுலகில் கழறற் குளரோ கவியெவரும் ?
ananth@mcmaster.ca