- நான்காவது கொலை!!!(அத்யாயம் ஆறு)
- குப்ஜாவின் பாட்டு
- அதுவரை காத்திருப்போம்.
- தோழியரே! தோழியரே!
- இதுவும் உன் லீலை தானா ?
- தேவதேவன் கவிதைகள் 5: வானும் ஒளியும்
- கலாச்சாரக் கதகளி
- புதிய பாலை
- யார்தான் துறவி ?
- பயணங்கள் முடிவதில்லை
- இரு கவிதைகள்
- கவலையுள்ள மனிதன்!
- நடிகர்கள்!
- எழுத / படிக்க
- ஒரு கடிதம்…
- புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது
- விளக்கெண்ணெயிலிருக்கும் விஷத்துக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன் (1888-1970)
- அறிவியல் மேதைகள் சர்.சி.வி. இராமன் (Sir.C.V.Raman)
- காவிரி நீர் போர்
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 6 2002 (காவிரி, முஷாரஃப், ஸ்டாலின், மனீஷா,மேற்கு வங்கம், சீனா)
- இருவேறான நீதிமுறை அளவுகோல்களுக்கெதிராக…….. ஆகன் சமாதானப்பாிசு
- குழந்தைகளை புதைத்து எடுத்த குழிமாற்றுத் திருவிழாவில் தவறேதும் இல்லை
- காவிரி நீர் போர்
- பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )
- கவிதாசரண் பத்திரிக்கை
ஆனந்தன்

ஏய் பெண்ணே…
என் நட்பின் இனியவளே…
முதலில் சந்தித்த – அந்த
முதல் நாள்
முத்தாக நினைவிருக்கிறது.
நீண்ட நேரம்
நிறைய பேசினோம்
நம் கடந்த கால
நிகழ்வுகளை, நிஜங்களை
நினைத்துப் பார்த்தோம்..
எதிர்கால கனவுகளை
ஏக்கத்தோடு
எண்ணிப் பார்த்தோம்…
வாழ்வின் கோட்களை
வாதிட்டோம்.
நான் பேசியவைக்கு – எல்லாம்
நீ செவிசாய்த்தாய்..
உன் பேச்சிற்கு நானும்.
நாம் பேசிய நேரங்களில்,
மேற்கில் சந்தித்த
கதிரவனும், சந்திரனும்
மீண்டும் ஒரு முறை
கிழக்கில் சந்தித்த
நாட்கள் எத்தனை…
மேகம் கரைந்து
கடலில் வீழ்ந்த
மழைத் துளி
முத்தாகி இருக்கும்,
தேய் பிறை இரவுகள்
வளர்ந்து
முழு நிலவாகி இருக்கும்,
விதைக் கொடியாகி
கொடி பூப் பூத்து
பூ காயாகி
கனிந்திருக்கும்….
வாடிய பூக்களைப் பார்த்து
வாடியிருக்கிறாய் நீ
நம் நட்பு வாடுவதை
உணரவில்லையோ நீ ?
நம்மை பிரித்த தூரம்
நம் நட்பையும் பிரித்துவிடுமோ ?
என் நட்பே…
ஒரு கடிதம் எழுதி
நம் நட்பை உயிர்பாய்.
k_anandan@yahoo.com