- ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்
- பனி பொழுதில்…
- மன்னிப்பே தண்டனை…
- குட்டாஸ்
- காத்திருக்க வேண்டுமன்றோ
- இவள் யாரோ ?
- நண்பா…..
- ஒத்திகைகள்
- காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.
- ‘புது மரபு ‘
- விஷ்ணுபுரம் பற்றி கோ ராஜாராமின் கருத்துக்கள் பற்றி…
- வழித்துணை
- முடிக்கக் கூடாத கவிதை
- மலேசிய தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலைமை
- வானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி
- வெற்றிடம்
- ஒரு நாள் கழிந்தது
- வழித்துணைவன்
- என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்
- நிறையக் கடவுள்கள் கொண்ட ஓர் அமைதித் தீவு – பாலி
- ரத்தமும் சோகமும் பெருகிய இந்தோனேஷியாவின் வருடம் 2001
- இந்தியாவின் மெதுவான நிலையான பொருளாதார முன்னேற்றம்.
- இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 3- 2002
- சூத்திர பார்ப்பனர்களும், பார்ப்பன சூத்திரர்களும்
- விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்.
மதுரபாரதி

இங்கே பயின்றதுதான்
அங்கே மேடையேறுகிறதா ?
மேடையேறியவை பயின்றபின்தானா ?
ஒவ்வொருவராய் வந்து அவரவர் பாத்திரம்
செய்து வெளியேறினார்.
வசனமில்லாத சிலபாத்திரங்கள்
நெடுநேரம் நின்றன.
இன்னும் சிலர்
எத்தனையோ
ஒத்திகைக்குப் பிறகும்
மேடையில் என்ன நடக்கிறதென்றே
புரியாமல் நின்றனர்.
பின்னால் ஒருவர்
விட்டுப்போன வசனங்களை
சொல்லிக்கொடுக்க.
ஆனாலும்
மறந்தவை மறந்தவை தான்.
வேஷம் கலைந்தபின்
விட்டுப்போனதெல்லாம்
ஒவ்வென்றாய் நினைவுக்கு வந்து
என்ன பயன்.
ஒரு வாய்ப்புத்தான்.
திரை இறங்கியபின்
நடித்தல் நடவாது.
ஆனாலும்
மேடையே வாழ்க்கைபோல
எத்தனை ஒத்திகைகள்!