- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- சீரணி அரங்கத்தில் பேரணி
- தேவகோட்டை – சிவகங்கை
- தலைப்பாரம்…..
- குழந்தை யேசு
- காவல்
- தீ தித்திப்பதில்லை…
- சின்னப் பூக்கள்
- மாற்றம்
- ஈழத்தில் சமாதானம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- கோயிலுக்கு
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- பயணம்
- மெளனம்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- இழந்த யோகம்
- பால்யகாலத்து நண்பன்!
- என் அக்கா
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- ஞாநிக்கு மீண்டும்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- உதிரும் சிறகு
- இந்திய இளவரசர்களே!
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
மதுரபாரதி

அந்த ஒளிக்கீற்று
மின்னலா, உதயமேதானா ?
நள்ளிரவுக் கதவுத்தட்டல்களில்
வெளிப்போந்து
வாராமல் மறைந்தவர் எத்தனை பேர்.
ஆனாலும் கண்களின் கதவைத்
திறந்து வைத்துக்கொண்டு
வருவார் வருவார் என
நம்பிக்கையே விளக்காகக் காத்திருக்கும்
தாய்மார், மனைவிமார் எத்தனை பேர்.
புதைத்த கண்ணிவெடிகள் உயிர்பெற்றபோது
எத்தனை உயிர்கள் புதைந்தன.
வெடிப்பதுதான் நின்றிருக்கிறதா,
போரேவா ?
எழுதுகோல் ஏந்தித் திருவாசகமும் திரிகோணமிதியும்
கற்கவேண்டிய சிறாரின் கைகளில் தானியங்கி
விமானம் வீழ்த்தும் துப்பாக்கிகள்.
என் செல்வங்களே வாருங்கள்,
வாழ்க்கையை மீண்டும் துவக்க
அவகாசம் உண்டு.
என் தாய்மார்களே
வற்றிப் போனது கண்ணீர்தான்
முலைப்பால் மீண்டும் சுரக்கும்.
நம்பிக்கையின் வெள்ளம் பாய்ந்து
மீண்டும் துளிர்க்கவேண்டும் மனிதம்.
அடுத்த முறை இரவில்
கதவு தட்டப்படும்போது
தாழ் திறக்கக் கைநடுங்கும்
பழகிப்போன அச்சத்தினால்.
திறவுங்கள்,
தட்டுவது அமைதித் தேவதையாகவும் இருக்கலாம்.
——-
madhurabarathi@yahoo.com