- ஒளவை – பகுதிகள் (7,8)
- கசப்பாக ஒரு வாசனை
- ஊமைப்பட்டாசு
- வையகத் தமிழ் வாழ்த்து
- கல்யாண்ஜி கவிதைகள் 4
- இருப்பதினால் ஆய பயன்
- குரல்வளம்
- பயமறியாப் பாசம்
- மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி
- மின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.
- மாறி வரும் செவ்வாய் கிரகம்
- நகலாக்கம்
- இந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு)
- தீர்ப்புகள் இங்கே – தீர்வுகள் எங்கே ?
- வேடிக்கை மனிதர்கள் செய்யும் அமெரிக்காவை திட்டும் விளையாட்டு
- காஷ்மீர் பிரிவினை இயக்கத்தின் சமூகப்பின்னணி. – முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு
கே.கே…

எங்கு போயின எம் திசையளந்த கனவுகள்
நாம் கண்ட உலகங்கள் எங்கே
எமது கபடமற்ற குழந்தைகளும் கருணை மிக்க
கடவுளுமெங்கே ….
எமக்கு புரியாவிடில் உணர்த்துங்கள்
மேன்மை தாங்கியவர்களே.
நாம் கேட்டது இல்லையெனில்
இருப்பதில் என்ன கோளாறு.
எங்கு போயினர் …
புத்தியும் சித்தியும் வாய்க்கப் பெற்ற எமது சகாக்கள்
ரோட்டின் மத்தியில் துண்டாடப்பட்ட
வெள்ளை கோட்டினைப் போன்ற
நேர்த்தியும் உறவுமற்ற நிலை எதற்கு.
எங்கள் உள்ளங்களை உயிராலன்றோ நிரப்பினோம்
உதிரம் ஏன் வடிகிறது
செய்தது சரியில்லையெனில்
எறியுங்கள் எம்மைப் புழுதியோடு
எமது பிரிவிழந்த கரங்களையும்
பிரியம் நிறைந்த நெஞ்சுக் கூட்டையும்
கடைசியாக ஒரு முறை உணர்ந்து பார்த்த பின்.