- அஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)
- உலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்! (டிசம்பர் 2003)
- மின் ஆளுகை (E-Governance)
- பெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.
- மூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.
- சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
- விடியும்! -நாவல்- (30)
- நீலக்கடல் – அத்தியாயம் 1
- முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி
- மனமென்னும் காடு-அலைந்ததும் அடைந்ததும்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)
- ‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)
- நேற்று, இன்று, நாளை
- பொங்கலைத் தேடி…
- நீ ஏன்…
- புரியாத புதிது
- கவிதைகள்
- வானவில்
- தி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…
- பரவச கவிதைகள் சில
- நிழல்கள்
- மூன்று
- இரவின் அழகு
- தேவதேவனின் மூன்று கவிதைகள்
- வாருங்கள்
- நீளப் போகும் பாதைகள்
- கிறிஸ்மஸ் விடுமுறை
- நீ வருவாயா ?
- அன்புடன் இதயம் – 2
- மின்சாரமில்லா இரவு
- நாடகமேடை
- இந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்
- பின்னல்
- வெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- கவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்
- வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை
- எனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் ? ‘
- அவதூறுகள் தொடாத இடம்
- பாரதி இலக்கியச் சங்கம்-சிவகாசி
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)
- ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘
சத்தி சக்திதாசன்

இரவு ராஜா
தன் மேனியைச்
சுற்றி போர்த்ததந்த
இருளாடை
கறுப்புச் சூழலிலும்
உயர்ந்து
பார்க்கையில் மலைபோல்
அடுக்காய்
தோன்றும் வெண்முகில்
கூட்டங்கள்
அதற்கும் மேலே
வண்ண நீலத்திரையாய்
வானத்தின் கோலம்
துல்லியமாய் அதில்
இயற்கையன்னை இட்டதொரு
வட்டமான ஓவியமாம்
வெண்ணிலவின் யாத்திரை
என்னே அழகு
எந்தன் இரவு எனும்
அந்த பருவக் கனிகை
மனிதர் யாவும் தம்
துயரங்களை ஒருகணம்
மூடிவைத்து
கனவெனும் ஓர் காலவரையற்ற
நதியினில் ஆடி மகிழ
பரிசென வந்த இரவு
இரவைப் பகல்
விழுங்கியதா ?
அன்றி
பகலை இரவு
கக்கியதா ?
தாலாட்டுப் பாடுவது
இரவு
தவிக்க விடுவது
பகல்
அமைதியைக் கொடுப்பதற்கு
அந்தஸ்து
கேட்பதில்லை இரவு
வெளிச்சத்தைக் கொடுத்து
விலையாய் உழைப்பை
வாங்குகின்றது பகல்
என் இரவின்
அழகைக் கலைக்காதே
பகலின் துன்பச்சுமைகளை
இறக்கி வைக்கும்
இரவுச் சுமைதாங்கியை
உடைத்து விடாதே
இரவின் இருளோடு
எத்தனையோ விழிகள்
தம் கண்ணீர் நதிகளை
உலகில் கலந்து
விடுகின்றன
பணமின்றி இந்த உலகில்
ரசிக்கக்கூடியவை
சொற்பமானவையே
இரவின் அமைதியை
பேராசையினால் என்றுமே
இழந்துவிட
சம்மதிக்க மாட்டேன்.
———————————————————–
sathnel.sakthithasan@bt.com