- விஸ்வரூபம் அத்தியாயம் அறுபத்தொன்பது
- இவர்களது எழுத்துமுறை – 29. சிவசங்கரி
- அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் தமிழ் சமூக கடமைகள் குறித்து
- எல்லைகடப்பதன் குறிப்புகள்
- கடிகை வழி பாதை
- நானாச்சு என்கிற நாணா
- கடவுச் சொற்களும் வரிசை எண்களும்
- பேராசை
- விதியை அறிதல்
- அவரவர் வாழ்வு
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- சொல்லவந்த மௌனங்கள்
- ஒப்பனை அறை பதிவுகள்
- இந்தியக் கனவா அல்லது அமெரிக்க கனவா?
- எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்
- எச்.முகமதுசலீம் எழுதிய அப்பாவியம், பிரதியியல்ஆய்வு
- நீளும் இகற்போர்…..
- ஆலிலை
- பொதுவான புள்ளியொன்றில்..
- பிழையாகும் மழை
- வெந்நீர் ஒத்தடம்!
- என் மரணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது
- ஞானியின் எதிர்பார்ப்புகள்
- மனப்பிறழ்வு
- ஒரு கனவுகூட மிஞ்சவில்லை
- இயலும்
- திரிசக்தி பதிப்பகம் நூல்கள் வெளியீட்டுவிழா
- அது அப்படித்தான் வரும்
- சிலாபம்!
- இருளொளி நாடகம்
- கம்பன் பிறந்த மண்ணான தேரெழுந்தூரில் கம்பர் கோட்டத்தில் மார்ச் 12 -13 ஆகிய நாள்களில் கம்பன் வி
- நியூ ஸிலாந்தில் நேர்ந்த தீவிர நிலநடுக்கம் ! (பிப்ரவரி 22, 2011)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -5)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1
- சுவாரஸ்யமான புகைப்படங்கள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29
ப.மதியழகன்

ஆயாசம் கொண்ட நிலவு
அமாவாசையன்று ஓய்வெடுக்கும்
பரிதியை மறைக்கும் முகில்
விலகாமலிருக்காது
நுதலில் பொட்டில்லை
ஆனால் அமங்கலியில்லை
கானகப் பாதையில்
விலங்குகளின் காலடித்தடங்கள்
அலையின் அழைப்பை
கரை ஏற்பதில்லை
தண்ணீர் எப்போதும்
ஓடவே முயல்கிறது
இலை உதிர்கிறது
மரத்தில் சலனமில்லை
மழை மண் பார்த்து
பெய்வதில்லை
துடுப்பில்லாத படகு
கரையைப் போய்ச் சேராது
சுனையில் ஊரும் நீரை
சுவைத்துக் குடிக்கும் மான்கள்
வானத்து சோபிதத்தை
யாரும் சொந்தம் கொண்டாட
இயலாது
அவரவர் தரப்பில்
அவரவர் நல்லவர்களே.