- அப்பாவின் படம்
- நிழல் (ஒரு நாடகம்)
- வாய் சொல்லில் வீரரடி
- நான்காவது கொலை!!! (அத்யாயம் 14)
- காமம்
- விடுமுறை
- சுகம்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது (தொடர்கவிதை -2)
- காதல் பூக்கும் காலம்
- நகர் வலம்
- பா சத்தியமோகனின் மூன்று கவிதைகள்
- இராம.கி. -இன் இரண்டு கவிதைகள் (உப்புத் தாலாட்டு , அரபு நுழைவு)
- ஆணின் வெற்றிக்குப் பின்னால்……
- ஆசை
- அம்மா சொன்னது
- அறிவியல் மேதைகள் -ஹோமி ஜஹாங்கீர் பாபா (Dr Homi Jehangir Bhabha)
- பேரழிவுப் போராயுதம் ஆக்கிய எட்வர்டு டெல்லர் (1908-****)
- தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ?
- வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்
- கலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் (எனக்குப் பிடித்த கதைகள் -34 – கர்த்தார்சிங் துக்கலின் ‘விந்தைச் செயல் ‘)
- தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா ?
எஸ். வைதேஹி.

மெல்ல வாழ்க்கையின் ரகசியம்
அடங்கிக் கொண்டிருக்கிறது.
புருவ முடியில் இருந்து
கனவின் கடைசி அத்தியாயம்
வரை நரைத்துவிட்ட
அம்மாதான் சொன்னாள்
முதலில்.
வர்ணங்கள் அற்ற
இரவுகளின் அழுகுரல்கள்
தினமும் அறைந்து கொண்டிருக்கிறது
வாசல்புற கதவுகளின்
இடுக்குகளில்.
அடையாளம் காண முடியாத
சவுக்கடிக்கு பின்னால்
பிரிந்து கூடி
மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது
அஞ்சறைப் பெட்டியினூடே
ஆளுமைப்படுத்தப்பட்ட
ஒரு கூடு.
தவிர்க்க முடியாமல்
காற்றில் பறந்த
காகிதங்களை
ஒழுங்கு படுத்தும்
அளவோடு
நின்று போயிற்று
வாழ்க்கையின்
அழகியல் பற்றிய என்
பிரச்சனை.
svaidehi@hotmail.com